நாகை: மழையால் பாதிக்கப்பட்ட எள் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் கோரிக்கை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி கிராமத்தில் 60 ஏக்கர் எள் சாகுபடி செய்துள்ள நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் எள் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் மழையினால் முற்றிலும் எள் பயிர்கள் அழிந்து விட்ட நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்ய முயன்றால் உம்பளச்சேரி கிராமத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாது என வேளாண்மை துறையினர் தடுத்து நிறுத்துவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எள்ளுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கான கடைசி நாள் இன்னும் மூன்று நாட்களில் முடிவடையவுள்ளதால், எள் விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் இன்சூரன்ஸ் செய்து இழப்பீடு பெற தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி