நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பாக, நத்தப்பள்ளம், திருவிடமருதூர், நீர்முளை, ஆய்மூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், கடைமடை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கமல்ராம் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.