நாகை: மின்சார ரயிலுக்கான சோதனை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெமோ இரயில் இயக்கப்பட்டது. தற்போது மின்வழித் தடம் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. டீசல் எஞ்சின் மூலம் இரயில் சேவை துவங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் மின்பாதை அமைக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப் பின் 110 கிலோமீட்டர் வேகத்தில் திருச்சி நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக திருச்சி செல்கிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும் விரைவில் மின்பாதைத் திட்டத்தில் அகஸ்தியர் பள்ளி - திருவாரூர் வரை இரயில் இயக்கப்படும் என இரயில்வே துறை முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமேஷ் குமார் தெரிவித்தார். இந்த சோதனை ஓட்டத்தின் போது ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி