கீழையூர் போலீஸ் சரகம் பிரதாபரப்புரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த கமல் ஷேக் அஷ்ரப் அலி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.