அதிர்ச்சி.. சூரியனார் கோவிலில் சிலைகள் மாயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சூரியனார் கோவிலில் 28 வது ஆதீனமாக மகாலிங்க பண்டார சந்நிதி இருந்தார், இவர் கர்நாடகாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது, இதனால் இவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது, இதையடுத்து ஆதீனத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ஆதீனம், தான் மடத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கிருந்த ஆத்மார்த்த மூர்த்தி ஐம்பொன் சிலைகள், நந்தியம் பெருமான், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர் சிலைகள், மரகத கற்கள் ஆகியவை காணாமல் போய் உள்ளது, இது குறித்து விசாரணை செய்ய வேண்டும், ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்

தொடர்புடைய செய்தி