மயிலாடுதுறை: குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி அருகில் உள்ள கொட்டுபாளையம் வடக்குத் தெருவில் விநாயகர் கோவில் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் அமளிச்செடிகள் முளைத்து பாசிப்படிந்து தண்ணீர் தூர்நாற்றம் வீசி வருகிறது. பல ஆண்டுகளாக இந்தச் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தை தூர்வாரிப் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி