உரிமைகுரல் ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சொந்த உபயோக வாகனங்களை வாடகைக்கு விடுவதால், முறையான வரிகட்டி இயங்கும் வாடகை வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, மயிலாடுதுறையில் உரிமைகுரல் ஓட்டுநர் சங்கம் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டவிரோதமாக வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி ஓட்டுநர்கள் கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மோட்டார் வாகன அலுவலர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்தி