மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காட்டில் உள்ள ஸ்ரீ வண்டாரகுழலி அம்பிகை உடனடியாக ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் திருவாவடுதுறை ஆதீனம் திருமுன்னர் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.