மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், ஓட்டுநர்கள் நல்ல தூக்கம், உடல் ஆரோக்கியம், மற்றும் நல்ல உணவுப் பழக்கத்துடன் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த முக்கிய ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.