மயிலாடுதுறை: வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் எஸ்பிஐ வங்கி முன், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வாரத்திற்கு 5 வேலை நாள்கள் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 12-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அலுவலக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறைமையை புகுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் தேசிய அளவிலான வங்கி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

 இதையொட்டி, முதற்கட்டமாக மயிலாடுதுறையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் வாயில் கூட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் மாவட்ட அதிகாரிகள் செயலர் பி. சங்கர்ராம், மாவட்ட தொழிலாளர்கள் செயலர் டி. விவேகானந்தன் உள்ளிட்டோரின் முன்னெடுப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.ஐ., கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி