மயிலாடுதுறை: பதக்கம் வென்ற மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் பள்ளியை சேர்ந்த சஞ்சீவ் வேல்முருகன் என்ற மாணவன், அபுதாபியில் நடைபெற்ற ஜூனியர் உலகப் பெண் காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள மாணவனுக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்புடைய செய்தி