மயிலாடுதுறை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

மயிலாடுதுறையில் சாராய கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாலையூர் காவல் எல்லை குத்தாலம் அஞ்சுவார்த்தலை காளி பிரதான சாலையில் வசிக்கும் வல்லரசு, கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த சுதாகரன். இருவரும் முட்டம் பகுதியைச் சேர்ந்த மதன் உதவியுடன் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததையடுத்து போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், சுதாகரன் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, சுதாகர் ஆட்சியரின் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். வல்லரசு ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி