மயிலாடுதுறை அடுத்த காளி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமராஜ் (32). மினி பஸ் டிரைவர் ஆன இவர் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கியுள்ளார். தகவல் அறிந்த நண்பர்கள் விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.