மேலும் சீசனுக்கு ஏற்றார் போல் சில இடங்களில் வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றையும் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது காழியப்பநல்லூர், பத்துக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியான எள் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மண் வளத்திற்கு ஏற்ப தேவையான எள் ரகங்களை சாகுபடி செய்து வருகிறோம். சில நேரங்களில் திடீரென மழை பெய்தது ஆறுதலாக இருந்தது. தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது. எள் செடிகளில் பூ பூத்து உள்ளது. வெயில் தாக்கம் குறைந்தால் மட்டுமே எள் மகசூல் நன்றாக இருக்கும். கடுமையான வெயில் நீடித்தால், செடிகளில் பூத்துள்ள பூ, காய்கள் உதிர்ந்து விடும். நிலத்தில் தற்போது உள்ள ஈரப்பதத்தால் எள் செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளது என்றனர்.