இதையடுத்து, வங்கி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில், தமிழ்செல்வன் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த கடன் தவணைத்தொகையில் ரூ. 5,16,332-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, வங்கி மேலாளர் வினோத் ஜூலை 11-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் அன்னக்கொடி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து தமிழ்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தபோது விபத்து: ஈரானில் 14 பேர் உயிரிழப்பு