போராட்டத்தின் 3-ஆவது நாளில் விசிக மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் அம்பேத் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆட்சியரக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் முரளிதரன், இடது தொழிற்சங்க மையத்தின் மாவட்ட செயலாளர் வீரச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதனிடையே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்ளிட்ட 125 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு காணப்படும் என்ற அதிகாரிகளின் பேச்சுக்கு உடன்படாத போராட்டக்காரர்கள், தீர்வு காணப்படும் வரை வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.