ஓஎன்ஜிசி நிறுவன நுழைவு வாயில் முன்பு பொதுமக்கள் திரண்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து குருடாயில் ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுவனத்தின் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராடினர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாரிடம் ஓஎன்ஜிசி அதிகாரிகளை வெளியே அழைத்து வரவேண்டும் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிறுவனத்தின் உள்ளே போராட்டக்காரர்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.