மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவணம் (80). இவருடைய பேத்தி புனிதா மற்றும் அவரது கணவர் காமராஜ் (38) ஆகியோர் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் புனிதாவை வீட்டிற்கு அழைத்து வராததால் ஆத்திரம் அடைந்த காமராஜ் வீட்டில் படுத்திருந்த மூதாட்டி ரவணம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை சீர்காழி மருத்துவமனையில் அனுமதித்தனர். மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் காமராஜை கைது செய்தனர்.