இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதியான 10 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து தலா ரூ. 1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. இப்பரிசுத் தொகை அரசு வழிமுறைகளில் தெரிவித்துள்ள உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகளின் அடிப்படையில் ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும்.
இதற்கான விண்ணப்பம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதை தகுதியுடைய ஊராட்சிகள் தாங்களாகவோ அல்லது மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (தணிக்கை) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.