இந்நிலையில், அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறவுள்ள கால்பந்து போட்டியில் பங்கேற்க இருவரும் தகுதி பெற்றிருந்தனர். இதற்காக, காட்டுச்சேரியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், காலை வீட்டிலிருந்து, விளையாட்டு மைதானத்துக்கு இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றனர். அந்தோணி விக்ரந்த் ராஜ் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். காராம்பள்ளம் அருகே சென்றபோது, நாகையிலிருந்து மயிலாடுதுறைக்கு நோக்கி சென்ற அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மூவரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். செல்லும் வழியில் பியூலா நான்சி உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தோணி விக்ரந்த் ராஜ் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.