மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள புதிய ஜெருசலேம் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணி முதல் 09:30 மணி வரை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதை ஒட்டி சபைக்குரு சாம்சன் மோமேஸ் ஐயர் சென்ற மே மாதம் முழுவதும் ஜீவனை தந்து சுகத்தோடு காத்துக்கொண்ட இயேசு ஆண்டவருக்கு நற்பலி செலுத்தினார். இறுதியில் திரும்பியதும் உபசரிப்பில் சபை மக்கள் கலந்து கொண்டு இயேசுநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.