தொடா்ந்து, ரயில் நிலைய வளாகம், முகப்பு, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட ரயில்வே பொது மேலாளா், கட்டடம், தூண்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து மக்களவை உறுப்பினருக்கு விளக்கி, பணிகள் தரமாக நடைபெற்று வருவதாக உறுதியளித்தாா்.
ஆய்வு குறித்து ரயில்வே பொது மேலாளா் ஆா். என். சிங் கூறியது: மயிலாடுதுறை, தஞ்சாவூா், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகள் 87 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் நிறைவடையும். இன்டா்சிட்டி ரயில் சேவை குறித்த கோரிக்கையை எம். பி. தெரிவித்துள்ளாா். வரும் நாள்களில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். காரைக்கால்-பேரளம் இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும்.