மயிலாடுதுறை: தாட்கோ மூலம் இளைஞா்களுக்கு திறன் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 23 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி 6 மாதங்களுக்கு அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவு தொகை ரூ. 95,000-த்தை தாட்கோ வழங்கும்.

தொடர்புடைய செய்தி