மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்ட பகுதியில் 30 ஆண்டுகளாக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை அடுத்துள்ள பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பொது மேம்பாட்டு நிதியில் இந்த விநாயகர் கோவிலுக்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.