சீர்காழி: பள்ளத்தில் விழுந்து சொகுசு வேன் விபத்து

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் இன்று நடைபெற இருந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சொகுசு மினி வேனில் சென்றுகொண்டிருந்தனர். 

அப்போது சீர்காழி அடுத்த புத்தூர் நான்கு வழி சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 11 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி