நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் உள்ள கருங்கண்ணியில் வசிக்கும் ஜான் பிரிட்டோ(75) என்பவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், இதில் கீழே விழுந்த ஜான் பிரிட்டோ மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.