இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நாகப்பட்டினம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சி. ரவி தலைமையில் புதன்கிழமை (பிப். 12) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. மின் நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.