இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படாததையடுத்து, டிஜிட்டல் க்ராப் சர்வே முறையை ஆக. 19-ஆம் தேதியுடன் கிராம நிர்வாக அலுவலர்கள் நிறுத்தினர். இந்நிலையில், இம்முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வலியுறுத்தி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டங்களில் உள்ள கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு தலைவர் திருமலைசங்கு தலைமையில் இன்று(செப்.19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் இம்மாதம் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு