திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக நேற்று (ஜூன் 4) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் லாட்டரி விற்பனை குறித்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கீழ அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.