நாகை: தியாகராஜ சுவாமியின் பிருங்க நடனம்

நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் தருமபுர ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி அருளாசியுடன் சித்திரை பெருவிழா கடந்த மே 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதவாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. 

விழாவின் முக்கிய நிகழ்வான வசந்த உற்சவம் இரவு நடைபெற்றது. சிவவாத்தியங்கள் முழங்க சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதியாகராஜ சுவாமி பிருங்கநடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு மகாதீபாரதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான உபசரஏற்பாடுகளை பி.டி.எம். செந்தில் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் கோயில் நிர்வாகிகள், இளைஞர்கள், பக்தர்கள், பெரியோர்கள் மற்றும் இறைப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி