தொடர்ந்து அந்த நெல் மலையை திருவாரூருக்கு பூதகணங்கள் உதவியோடு கொண்டு செல்லும் ஐதீக விழா நெல் மகோற்சவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழார் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரர் நெல் மலையை பார்க்க குண்டையூர் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின.