இந்த நிலையில் தாங்கள் குடியிருக்கும் வீடுகள் கோவில் இடம் இல்லையென்றும் அரசு பதிவேட்டில் நத்தம் பூரா நிலம் என்று உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி வாசிகள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையினர் குடியிருப்பு வாசிகள் நல சங்கத் தலைவர் கோவிந்தராஜின் வீட்டை காலி செய்ய கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறியநிலையத்துறை அதிகாரிகள் வீட்டை காலி செய்ய நெருக்கடி கொடுப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குடியிருப்பு வாசிகள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
நாளை மறுதினம் வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!