நாகப்பட்டினம்: ஊராட்சித் தலைவா்கள் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ஆர். ராதாகிருட்டிணன் தலைமை வகித்தார். 

வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர். டி. எஸ். சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய ஆணையர் சரவணன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி