உலகிலுள்ள மிகப் பழமையான கடற்கரை நகரங்களில் ஒன்றான தரங்கம்பாடியின் அடையாளச் சின்னமாக விளங்கக்கூடிய டேனிஷ் கோட்டையைப் பாதுகாக்கும் விதமாக ஏற்கெனவே தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் முதல் அமைக்கப்பட்டுள்ள கருங்கற்கள் தடுப்புச் சுவரை, டேனிஷ் கோட்டையைத் தாண்டி நீட்டித்து அமைக்க வேண்டும் என்று தரங்கம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பேரூராட்சித் துணைத் தலைவருமான பொன். இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது ரூ.3.63 கோடியில் டேனிஷ் கோட்டையைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன் கோட்டையைச் சுற்றிக் கருங்கற்கள் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீர்காழி
புற்றடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்