நாகையில் குளத்தில் பாய்ந்து மூழ்கிய சொகுசு கார்

நாகை - தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் சங்கமங்களம் பகுதியில் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் குளத்தில் பாய்ந்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது. இதில் கோயம்புத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த டேவிட் ஜான்சன் குடும்பத்தினர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயங்களுடன் நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து குளத்தில் மூழ்கிய காரை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி