நாகை: அரசுப் பேருந்து நடத்துநா் மயங்கி விழுந்து பலி

நாகை பணிமனையில் நடத்துநர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள ஆய்மூர் பெருமழையைச் சேர்ந்தவர் மணிவாசகம் (55). அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாகை - பட்டுக்கோட்டை இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மணிவாசகம் காலை நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பணிக்கு வந்தார். 

பணிமனையில் உள்ள அலுவலகத்தில் பயணச் சீட்டுகளை பெற்றுக்கொண்டு, ஓட்டுநருக்காக காத்திருந்த மணிவாசகம் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த சகப் பணியாளர்கள் அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மணிவாசகம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி