நாகை: நேரடி நெல் விதைப்பு.. களத்தில் இறங்கிய ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.06.2025 அன்று 17.15 இலட்சம் ஏக்கர் டெல்டா விவசாய நிலங்கள் பாசன வசதி பெற மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் பட்டமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் பாரம்பரிய முறைப்படி நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், நேரடி விதை நெல்லை தெளித்து குறுவை சாகுபடியை தொடங்கி வைத்தார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து குறுவை பருவத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் 5809.71 ஹெக்டர் பயிர் ரூ.309.65 இலட்சம் மதிப்பிலும், 2022-23 ஆம் ஆண்டில் 8656.94 ஹெக்டர் பயிர் ரூ.149.478 இலட்சம் மதிப்பிலும், 2023-24 ஆம் ஆண்டில் 7012.8 ஹெக்டர் பயிர் ரூ.637.6 இலட்சம் மதிப்பிலும், 2024-25 ஆம் ஆண்டில் 1737 ஹெக்டர் பயிர் ரூ.29.10 இலட்சம் மதிப்பிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து குறுவை சாகுபடிக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடிக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்டு குறுவை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி