நாகை: அக்னி வீர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

இந்திய இராணுவத்தின் அக்னி வீரர் தேர்வில் முதல் கட்ட தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள நாகப்பட்டினம் மாவட்ட பணிநாடுபவர்களை மாவட்ட நிர்வாகம் வாழ்த்துகிறது. முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இளைஞர்களுக்கு அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள உடல்தகுதித் தேர்வுக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளது. 

உடல்தகுதித் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த ஆயத்தக்கூட்டம் 05.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் உரிய பயிற்றுநர்களால் வழங்கப்படும். முதல்கட்ட தேர்வில் வெற்றிபெற்றுள்ள பணிநாடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அக்னிவீரர் படையில் சேர்விற்கு எந்த வித கையூட்டும் எவரிடமும் தரவேண்டாமெனவும், இடைத்தரகர்கள் எவரையும் நம்பி ஏமாற வேண்டாமெனவும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி