கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேமங்கலம் புலியூர் பகுதியைச் சேர்ந்த 65 வயது கொத்தனார் யாக்கோபு, வயலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், தேமங்கலம் தெற்கு வெளி சங்கமங்கலம் பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.