நாகை அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கொத்தனார் முருகேசன் (40) என்பவரை மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். கீழ்வேளூரைச் சேர்ந்த முருகேசன், மனநலம் குன்றிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அப்பகுதி மக்கள் வந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.