ரயில் முன் தள்ளி கொலை.. தீர்ப்பு விவரங்கள்

சென்னை பரங்கிமலையில் மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சிபிசிஐடி மிகச்சிறப்பாக விசாரித்ததால்தான் மாணவி கொலை வழக்கில் குற்றத்திற்கான தூண்டுதலைக் கண்டறிந்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிக்கு மரண தண்டனை, 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி