தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் ஜனவரி 4 வரை மிதமான மழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்த செய்தி மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.