இந்தியாவில் வரும் ஜூன் 2026 முதல் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் சுமார் 15% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பிரபல நிதி ஆய்வு நிறுவனமான 'ஜெஃப்ரீஸ்' தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 2 ஆண்டுகள் கழித்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. 5G நெட்வொர்க் விரிவாக்கம், அதிகரித்து வரும் தரவு பயன்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக, ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன.