சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

சாம்சங் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்க அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் கூறுகையில், "நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் உரையாடினோம். பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புகிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி