திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் துரைமுருகன், 87 வயதைத் தாண்டியுள்ளார். உடல்நலக் குறைவுகள், வயது மூப்பின் காரணமாக அவர் தனது கட்சி பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி எம்.பி.,யுமான கதிர் ஆனந்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.