'மரகத நாணயம்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த பாகத்தையும் தயாரிக்கிறது. இரண்டாம் பாகத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.