மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் 3 பேரும், கூட்டணியில் உள்ள மநீமவுக்கு ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் போட்டியிடுகின்றனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி