பிரபல பாடகி ஜொனிதா காந்தி, சமூக வலைத்தளங்களில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது, "இன்ஸ்டாகிராமில் தற்செயலாக ஒரு ஸ்டோரியைக் கண்டேன். அதில் ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து, அதன் பின்னணியில் என் புகைப்படத்தை வைத்திருந்தார். இவை அனைத்தும் பாலியல் சீண்டல்கள்தான். இதுபோல பலர் எனக்கு தொல்லை கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.