கொடைக்கானலில், மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக செயல்பட்டு முதியவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு ஆறுதல் கூறி, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
நன்றி: NewsTamilTV24x7