மதுரை: ஆபரேஷன் முடிந்த சில மணி நேரத்தில் நோயாளி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொக்கிகுளத்தை சேர்ந்த ராமுவின் மனைவி தேவி (50) என்பவர் தனது கர்ப்பபையை அறுவை சிகிச்சை செய்து எடுப்பதற்காக உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

நேற்று (மார்ச். 18) காலை இவரது கர்ப்பபை அகற்றப்பட்டு ஆபரேஷன் முடிந்த பின்னர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அவருடைய நாடி துடிப்பு தொடர்ந்து குறைய ஆரம்பித்து பின்னர் உயிரிழந்தார். இது தொடர்பாக கணவர் ராமு உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி